வெண்ணாறு தூர்வாரப்படுமா?

Update: 2024-05-05 15:08 GMT

தஞ்சை மாவட்டம் தொண்டராயன்பாடி கிராம பகுதியில் உள்ள வெண்ணாற்றில் செடி,கொடிகள், கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் ஆறு விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறி வருகிறது. மேலும், கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டால் இவை நீரின் வழிப்பாதைக்கு தடையாக மாறிவிடும். தற்போது நீரின்று ஆறு வறண்டு கிடக்கிறது. இதனை பயன்படுத்தி வளர்ந்துள்ள செடி,கொடிகள் மற்றும் கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்