குடிநீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் அவதி

Update: 2024-05-05 12:39 GMT
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் வையம்பட்டி ஒன்றியம் குமாரவாடி ஊராட்சியில் அன்னசமுத்திரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களுக்கு மேல் நிலை நீர் தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் தொட்டியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. தற்போது குடிநீர் தொட்டி தார்ப்பாய் மூலம் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்