குளம் தூர்வாரப்படுமா?

Update: 2024-04-28 16:32 GMT
\காட்டுமன்னார்கோவில் அருகில் ம.கொளக்குடி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பொட்டகுளம் உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த குளம் தற்போது தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் இந்த குளத்தில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்க்க குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்