குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2024-04-28 11:47 GMT

திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் திருச்செந்தூர், உடன்குடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் நா.முத்தையாபுரம் வடக்கு புதுகாலனி பகுதி வழியாக செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்