சீரமைக்கப்படாத குடிநீர் தொட்டி

Update: 2024-04-07 12:41 GMT

கரூர் மாவட்டம், அருகம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இதனை இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதினால் தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டியை வைத்துள்ள மேடையானது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகே செல்லும்போது குடிநீர் தொட்டியின் மேடை இடிந்து விழுந்தால் அவர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்