குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-03-31 17:24 GMT
கடையம் வழியாக பாபநாசத்தில் இருந்து சங்கரன்கோவில் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாயில் கடையம் சந்தைபட்டறை அருகில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, சாலைஓரத்திலும், தண்டவாளம் பகுதியிலும் தேங்கி வீணாகி வருகிறது. மேலும் அப்பகுதியில் பல மாதங்களாக தண்ணீர் வெளியேறி பாசிபடர்ந்து சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்புகளை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுப்பதுடன், சுகாதாரக்கேட்டையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்