குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-03-17 12:59 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை சந்தை அருகில் செவுலூர் சாலை பிரிவு அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரானது சாலையோரம் ஆறுபோல் ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதுமான குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்