மினி குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-10 16:49 GMT
விருத்தாசலம் அருகே நாச்சியார்பேட்டை பாலாம்பிகை தெருவில் உள்ள மினி குடிநீர் தொட்டி சிதிலமடைந்து உள்ளதால் அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் பிடிக்க அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதால் அவர்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே மினி குடிநீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்