பராமரிக்கப்படாத நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-03-10 11:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், காரக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கவனம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வாசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதால் இதைச்சுற்றி கருவேலம் மரங்கள் அதிக அளவில் முளைத்து விஷச்சந்துக்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இந்த நீர்த்தேக்க தொட்டியின் அருகே செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்