சீரான குடிநீர் வேண்டும்

Update: 2024-02-18 17:09 GMT

தர்மபுரி இலக்கியம்பட்டி வி.பி.சிங் தெரு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதியில் தண்ணீர் வினியோகம் சீராக இல்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினையால் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். கோடை காலம் தொடங்க உள்ள சூழலில் இப்பகுதி குடியிருப்புகளுக்கு சீராக தண்ணீர் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்