வீணாகும் குடிநீர்

Update: 2024-02-18 13:55 GMT

சென்னை அடையாறு, களிகுன்றம் பிரதான சாலையில் தனியார் நிறுவனம் இண்டர்நெட் கேபிள் புதைப்பதற்காக பூமியில் துளையிடும் பணி நடைபெற்றது. அப்போது பள்ளிப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் பெரிய குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தது. இதனால், கடந்த 2 நாட்களாக குடிநீர், சாலையில் வெள்ளம் போல் ஓடுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்