மின்விபத்து அபாயம்

Update: 2024-02-11 17:38 GMT
பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு திருமலை அகரம் மேற்கு பகுதியில் உள்ள மின்கம்பத்தின் அடியில் இருந்த குழாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் மின்கம்பம் சாய்ந்து விழும் நிலை உருவானது. இதுபற்றி அறிந்த மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக கம்பத்தின் உச்சியில் இருந்து மின்கம்பியை கட்டி அதன் மறுமுனையை அருகில் உள்ள வேப்பமரத்தில் கட்டினர். ஆனால் 7 மாதங்கள் ஆகியும் இன்னமும் சாய்ந்த மின்கம்பம் சரிசெய்யவில்லை. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்