தேங்கிய மழைநீர் அகற்றப்படுமா?

Update: 2024-01-28 11:59 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஈஞ்சம்பாக்கம், அனுமன் காலனி, ராஜன் நகர் 3-வது தெருவில் கனமழையின் பெய்த போது தேங்கிய மழை நீர் வடியாமல் அப்படியே கிடக்கிறது. இதனால், அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வெளியில் செல்வோர் என பொதுமக்கள் யாரும் அந்த பகுதி வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், தேங்கிய நீரில் அதிக அளவு கொசு உற்பத்தியாகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் வேதனை உணர்ந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேங்கிய மழை நீரை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்