திறந்து கிடக்கும் குடிநீர் தொட்டி மூடப்படுமா?

Update: 2024-01-21 11:53 GMT

பொன்னமராவதி தாலுகா இடையாத்தூர் ஊராட்சி அம்பாள் புரத்திலிருந்து அம்மாப்பட்டி வழியாக சடையம்பட்டி இணைப்பு சாலைக்கு செல்லும் சாலையில் காவேரி கூட்டு குடிநீர் தொட்டியின் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த வழியாக அதிக அளவில் இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றனர்.எனவே மூடப்படாத தொட்டியில் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் பல இடங்களில் சாலையோர தொட்டிகள் மூடப்படாமல் உள்ளன எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள தொட்டியினை மூட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்