குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2024-01-14 17:07 GMT
சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூரில் உள்ள புதுப்பேட்டை சாலையில் குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. மேலும் உடைந்த குழாய் வழியாக கழிவுநீர் கலப்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்