குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி

Update: 2023-12-24 14:13 GMT
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் காவிரி ஆற்றில் வட்ட கிணற்றுக்குள் மின்மோட்டார் பொருத்தப்பட்டு குறுக்குச்சாலை பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் குறுக்குச்சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்க பணிகள் நடந்தபோது, குடிநீர் குழாய்களை சேதமடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்