நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு

Update: 2023-11-19 12:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டத்தில் தற்போது பருவமழை பெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள பல கண்மாய்கள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள அருணாச்சல காவிரி என்ற வடிகால் நீர் வழிப்பாதை பராமரிப்பு இன்றி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் உபரிநீர் வெளியேறி ஓட முடியாத நிலையால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்