செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அகரம்தென் ஊராட்சி கஸ்பாபுரம் கிராமம் கிருஷ்ணா நகரின் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. அங்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படாததே இதற்கு காரணம். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்களில் செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர் உள்ளது. மேலும் கொசுக்கள் அதிகளவில் காணப்படுவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு மழைநீர் வடிகால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.