பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-10-15 12:36 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலையில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நொய்யல் ரெயில்வே கேட் அருகே சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது இந்த தொட்டி பயன்பாடு இன்றி வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்