குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-10-01 18:18 GMT

திருவேங்கடம் தாலுகா காரிசாத்தான் பஞ்சாயத்து சம்சிகாபுரத்தில் கடந்த சில நாட்களாக போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. எனவே அங்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்