குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-09-24 16:22 GMT

தர்மபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், விடுதிகள், போலீஸ் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் உப்பு தண்ணீர்தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு நோய்களால் அவதி அடைகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக அரசு மாணவர் விடுதி அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாமல் உள்ளது. எனவே இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜாராம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்