விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு கண்மாய் நீரே முக்கிய நீர் ஆதாரமாக உள்ளன. மாவட்டத்தில் காணப்படும் சில கண்மாய்களில் கருவேலமரங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட கருவேலமரங்களால் கண்மாயில் நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாய்களில் உள்ள கருவேலமரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.