கடமலைக்குண்டுவில் உள்ள பாலூத்து ஓடை முழுவதும் நாணல்செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் ஓடையில் தண்ணீர் தேக்கமுடியாத நிலை இருப்பதுடன், ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துவிடுகிறது. எனவே ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள நாணல் செடிகளை உடனே அகற்ற வேண்டும்.