தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்குமா?

Update: 2024-06-30 20:27 GMT

திருவண்ணாமலையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலப் பாதையில் சுமார் 6-க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் உள்ளன. இது, பெரும்பாலும் பவுா்ணமி நாட்களில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்ற நாட்களில் குடிநீர் வழங்குவதில்லை. எனவே அனைத்து நாட்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்