குடிநீர் பிரச்சினை

Update: 2023-02-12 15:13 GMT

கலவை பேரூராட்சி 4-வது வார்டு அங்காளம்மன் கோவில் பின்பக்கம் ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறுமின்விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் மின்மோட்டார் பழுதடைந்து விட்டதாகத் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் செய்வார்களா?

-சதீஷ், கலவை.

மேலும் செய்திகள்