ஓடையை தூர்வார வேண்டும்

Update: 2024-06-09 14:00 GMT

செங்கம் தாலுகா காஞ்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள வாய்க்கால் ஓடையில் கழிவுநீரும், மழைநீரும் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. ஆகையால் ஓடையை தூர்வாரினால் நிலங்களில் இருந்து வரும் அதிகப்படியான நீர் வெளியேறி செய்யாற்றில் கலக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையை தூர்வார வேண்டும்.

-கவுசிகன், கலசபாக்கம். 

மேலும் செய்திகள்