கால்வாய் பணியால் குடிநீர் குழாய்கள் சேதம்

Update: 2022-09-25 12:42 GMT

பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் 4 மாதமாக மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணியால் குடிநீர் குழாய்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. குழாய் உடைப்பை ஒப்பந்ததாரர் அல்லது பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. உடனடியாக உடைந்த குடிநீர் குழாய்களை ஒப்பந்ததாரரோ அல்லது பேரூராட்சி நிர்வாகமோ சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-சுரேஷ்கண்ணன், பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்