மதுரை மாநகராட்சி 30 - வது வார்டு மதிச்சியம் முத்து தெரு பகுதியில் சிலர் தொடர்ந்து மின்மோட்டார் மூலம் குடிதண்ணீரை உறிஞ்சி எடுத்து வருகின்றனர். இதனால் தெருவில் உள்ள குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. குடிதண்ணீர் பிரச்சினையால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே குடிநீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.