குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-02-22 16:21 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெருவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக்் குழாய் உடைந்து, அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி கொண்டே இருக்கிறது. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் உடைந்த குழாயை சீரமைக்க அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருகிற கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உடனடியாக உடைந்த குழாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், சோளிங்கர்.

மேலும் செய்திகள்