குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-10-26 13:16 GMT

அகரம்சேரி பாலாற்றில் உலக வங்கி நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தேக்கத்தொட்டியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரம் உள்ள ஒடுகத்தூருக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அகரம்சேரி பகுதியில் குடிநீர் குழாயில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னால் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி குளம்போல் தேங்கி உள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் அசுத்தமாக உள்ளதால், அந்த அசுத்தம் குடிநீருடன் கலக்க வாய்ப்புள்ளது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-பாண்டியன், பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்