அகற்றப்படாத ஆகாய தாமரைகள்

Update: 2023-03-26 11:53 GMT

திருச்சி மாவட்டம், மேலணை வாத்தலை என்ற ஊரில் இருந்து விவசாய பாசனத்திற்காக கடந்த 1959-ம் ஆண்டு கட்டப்பட்ட சுமார் 59 கிலோ மீட்டர் நீளமுள்ள புள்ளம்பாடி வாய்க்கால் செல்கிறது. இந்த நிலையில் தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள் அருகே ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் முளைத்துள்ளது. இதனால் தண்ணீர் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்