கைப்பம்பு சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-12 13:50 GMT

திருவாரூர் மாவட்டம் பழைய நீடாமங்கலம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக கைப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டது. இதன்மூலம் அந்த பகுதி மக்கள் தண்ணீர் வசதி பெற்று வந்தனர். இந்த நிலையில் கைப்பம்பு முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் கைப்பம்பின் அடிப்பகுதி துருப்பிடித்து முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கைப்பம்பை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்