வடிகாலில் இறங்கி குடிநீர் பிடிக்கும் அவலம்

Update: 2022-11-13 11:08 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அண்டகத்துறை கிழக்கு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வடிகால் கரையில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழாய் மூலம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். தற்போது தண்ணீர் போதிய அளவு வருவதில்லை. இதனால் பள்ளம் தோண்டப்பட்டு வடிகால் உள்ளே இறங்கி தண்ணீர் பிடித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதோடு, குழாயை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்