தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி

Update: 2022-09-26 14:12 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பஸ் நிலையம் உள்பட பேரூராட்சி பகுதியில் பிரதான சாலையோரங்கள் முதல் தெருசாலை ஓரங்களில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் காய்யச்சல் மற்றும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பிரதான சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் சாலையோற தண்ணீருக்காக வாகனங்கள் ஒதுங்கும் போது விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்