குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-08-21 14:28 GMT
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, நமங்குணம் கிராமம் 1-வது வார்டில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்