பள்ளியில் தேங்கும் மழைநீர்

Update: 2022-08-18 16:15 GMT

கிருஷ்ணகிரியில் சில அரசு பள்ளிகளில் மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லையாக இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி மாநகராட்சி அதிகாரிகள் மழைக்காலம் தொடங்குவதற்கு அரசு பள்ளிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேந்திரன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்