மானூர் யூனியன் கட்டாரங்குளம் கிராமம் கீழத்தெருவில் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து பயனடைந்து வந்தனர். ஜல்சக்தி திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தபோது, இதன் பயன்பாடு துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே குடிநீர் தொட்டி மீண்டும் பயன்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?