பழுதான மின்மோட்டாரால் குடிநீர் வினியோகம் பாதிப்பு

Update: 2022-08-16 13:43 GMT
ரிஷிவந்தியம் அருகே பாக்கம் கிராமத்தில் உள்ள கோவில் அருகே மினி குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில் மின்மோட்டார் பழுதால் மினி குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழுதான மின்மோட்டாரை சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்