கிருஷ்ணகிரியில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் குடிநீர் தொட்டி பராமரிக்கப்படாததால் தொட்டியில் பாசி வளர்ந்து சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் உள்ளது. அந்த தண்ணீரைத்தான் மாணவ-மாணவிகள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து பராமரித்து நல்ல குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும்.
-லோகநாதன், கிருஷ்ணகிரி.