அரியலூர் தாலுகா அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி எதுவும் இல்லாமல் உள்ளதால் தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.