சீரான குடிநீர் தேவை

Update: 2022-08-11 14:10 GMT

நாகர்கோவில் வல்லன்குமாரன்விளையில் சிவசுடலைமாடன் சாமி கோவில் சாலை உள்ளது. இந்த சாலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதையடுத்து சீரமைப்பு பணிக்காக வந்த ஊழியர்கள் சரியாக சீரமைக்காமலும், பள்ளத்தை முறைகாக மூடாமலும் சென்று விட்டுனர். இதனால், குடிநீர் வினியோகம் தட்டுபட்டதால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பள்ளத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த குடிநீர் இணைப்புகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வினோத், வல்லன்குமாரன்விளை

மேலும் செய்திகள்