திறந்து கிடக்கும் தண்ணீர் தொட்டிகள்

Update: 2022-08-11 12:41 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டார பகுதிகளில் காவிரி மேல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி தண்ணீர் பல்வேறு பகுதிகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த காவிரி தண்ணீர் வரும் வழியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற தண்ணீர் வெளியேற்ற தொட்டிகள் திறந்த வெளியில் இருப்பதினால் அவற்றில் ஆடு, மாடுகள், நாய்கள், குரங்குகள் தண்ணீர் குடித்தும், குளித்து அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால் குடிநீர் மாசு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்