வீணாகும் குடிநீர்

Update: 2022-08-11 11:40 GMT

தியாகதுருகம் அருகே மேல்பூண்டிதக்கா கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே தரைதள தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு, அதில் ரிஷிவந்தியம்-மணலூர்பேட்டை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. தொடர்ந்து அங்கிருந்து குடிநீர் குழாய் மூலம் மேல்பூண்டி தக்கா பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் விருகாவூர் சாலையில் இந்த குடிநீர் குழாய் உடைந்து கடந்த 4 ஆண்டுகளாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்