குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-08-08 13:47 GMT
புதுக்கோட்டை மாவட்டம், பெருமருதூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் சரியான முறையில் வழங்கப்படுவது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள ஊர்களுக்கும், தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள்

மேலும் செய்திகள்