விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் சமூக பாதுகாப்பு திட்ட குடிநீர் வழங்கும் மையம் பல ஆண்டுகளாக செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் குடிநீர் இன்றி அவதியடைகின்றனர். இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?