அரியலூர் மாவட்டம், அங்கராயநல்லூர் பஞ்சாயத்து, உத்திரக்குடி கிராமத்தில் உள்ள சேவை மையம் அருகில் பொது குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தனிநபர் ஒருவர் தனது வீட்டுக்கு மட்டும் தண்ணீரை திறந்து பயன்படுத்தி வருகிறார். இதனால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.