சுத்தம் செய்யப்படாத நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-08-05 12:37 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தெரணி கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு அப்பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யாததால் சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களின் உடல்நிலை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்