கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பசுவண்ணகோவில் பகுதியில் ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் மழைநீர் வடிகால் அமைத்து தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.
-சரண், பர்கூர், கிருஷ்ணகிரி.