செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2022-08-04 13:32 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கணக்கண்குப்பத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.8 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. திறந்த முதல் 2 மாதங்கள் மட்டுமே இயங்கிய இந்த மையம் தற்போது இயங்கவில்லை. தண்ணீர் சுத்திகரிப்புக்கான எந்திரம் பழுதாகி 4 மாதங்கள் ஆகியும், அதை சீரமைக்க அதிகாாிகள் இதுவரைவில் முன்வரவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்