குடிநீர் கிணறுக்கு மூடி தேவை

Update: 2022-08-02 11:19 GMT
ரிஷிவந்தியம் அருகே பாக்கம் ஏரிக்கரையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்கப்படவில்லை. இதனால் குப்பைகள் கிணற்றில் விழுந்து கிடப்பதால், தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க குடிநீர் கிணறுக்கு மூடி அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்